News October 9, 2025

கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட ஈ.பி.எஸ்!

image

நாமக்கல் A.S. பேட்டை பகுதியில் இன்று நடைபெறும் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயண பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சேலம் மாநகரிலிருந்து வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாப்பிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஜெயா பேலஸில் நடைபெற்ற விவசாயிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Similar News

News October 28, 2025

நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து உயரும் முட்டை விலை

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள் முதல் விலை 530 காசுகளாக இருந்து வந்த நிலையில நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 535 காசுகளாக அதிகரித்து உள்ளது.
கறிக்கோழி கிலோ ரூ.101-க் கும், முட்டைக்கோழி கிலோ ரூ.110-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை

News October 28, 2025

நாமக்கல்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

நாமக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News October 28, 2025

நாமக்கல்லில் வசமாக சிக்கிய இளைஞர்!

image

நாமக்கல், தூசூரை சேர்ந்தவர் காமாட்சி (75). இவர் கடந்த பிப்ரவரி 16ம் தேதி வீட்டில் இருந்து போது அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர், காமாட்சியின் வாயை பொத்தி, அவர் அணிந்து இருந்த 5 பவுன் தாலிக்கொடியை பறித்து கொண்டு தலைமறைவானர். இதுகுறித்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட நாமக்கல் போலீசார் கணவாய்பட்டியை சேர்ந்த பரத் மனோ (26) என்ற இளைஞரை 8 மாதங்களுக்கு பிறகு நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!