News August 20, 2024
கலசபாக்கத்தில் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

கலசபாக்கத்திற்கு அடுத்த கெங்கவரம் மதுரா நவாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவர் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, ராணிபேட்டை சி.எம்.சி மருத்துவமனையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. இன்று ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் அரசு மரியாதை செலுத்தினர்.
Similar News
News August 24, 2025
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை குறிப்பிட்ட இடங்களிலேயே கரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி, தாமரைக்குளம், பச்சையம்மன் கோவில் குளம், சுகநதி, இறையூர் ஏரி, தென்பெண்ணையாறு, பூமா செட்டிகுளம், கோனேரியான்குளம், பையூர் பாறைக்குளம் மற்றும் காட்ராண்குளம் ஆகிய இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News August 23, 2025
திருவண்ணாமலை மாவட்டம் இரவு ரோந்து பணி காவலர் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (23.08.2025) இரவு 10 மணி முதல் (24-08-2025)காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். தாலுக்கா வாரியாக காவல்துறை அதிகாரியின் கைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இரவில் அவசர தேவைக்கு நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு.
News August 23, 2025
தி.மலை மாவட்டம் மழை அளவு மில்லி மீட்டர் வெளியீடு

தி.மலை மாவட்டத்தில் நேற்று (22/08/2025) ஆரணி, போளூர் செய்யார், வந்தவாசி ,ஜவ்வாது மலை ,களம்பூர், கண்ணமங்கலம் செங்கம் தி.மலை போன்ற பகுதிகளில் பரவலாக கனமழையும். இடியும் கூடிய மிதமான மழையும் பெய்தது. நேற்றைய மழையின் அளவினை மில்லி மீட்டரில் வெளியிடபட்டுள்ளது. இன்று( 23-08-2025)இரவு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக காணப்படுகிறது.