News April 25, 2024
கர்நாடக மாநில தொழிலாளர்களுக்கு விடுமுறை

ஈரோடு, பெருந்துறை தாலுக்கா உட்பட்ட சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் கர்நாடக மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் நாளை நடைபெறக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு விடுமுறை வழங்கி உள்ளனர். அதேபோல பனியன் கம்பெனிகளில் வேலை செய்யக்கூடிய கர்நாடக மாநில தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 26, 2026
ஈரோடு: ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை!

ஈரோடு மக்களே, யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள 173 Generalist and Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். இப்பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் வரும் பிப்.2ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News January 26, 2026
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, கணபதிபாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், சாணார்பாளையம், வேலம்பாளையம், சின்னமாபுரம், பாசூர், காங்கேயம்பாளையம், ராக்கியாபாளையம், கல்யாணிபுதூர், வேங்கியம்பாளையம், உத்தாண்டிபாளையம், பெரிய வீரசங்கிலி, சின்ன வீரசங்கிலி, கைக்கோல்பாளையம், கினிப்பாளையம், கரட்டூர், பாப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News January 26, 2026
சென்னிமலை அருகே சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

சென்னிமலை அருகே 14வயது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், தாய் அவரை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமி 22 வார கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. விசாரணையில், கடந்த ஜூன் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த கௌரிசங்கர்(19) என்ற வாலிபர், சிறுமியை மிரட்டி நள்ளிரவில் பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமானது. இதுகுறித்து தாய் அளித்த புகாரின் பேரில், சென்னிமலை போலீஸார் வாலிபர் கைது செய்தனர்.


