News May 24, 2024

கர்தார்பூர் சாஹிப் பகுதியை கைப்பற்றியிருப்பேன்

image

பஞ்சாப் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று மோடி பேசினார். அப்போது அவர், பிரிவினையின்போது சீக்கியர்களின் புனித பகுதியான கர்தார்பூர் சாஹிப் பாகிஸ்தானிடம் விடப்பட்டதால் 70 ஆண்டுகளாக அப்பகுதியை பைனாகுலரில் பார்க்கும் நிலை உள்ளதாகவும், 1970 போரின் போது தான் பிரதமராக இருந்திருந்தால், வங்கதேசப் போரில் சரணடைந்த 90,000 பாகிஸ்தான் வீரர்களை ஒப்படைத்து அப்பகுதியை கைப்பற்றியிருப்பேன் எனக் கூறினார்.

Similar News

News August 17, 2025

நடிகை மினு முனிர் வழக்கில் திடுக்கிடும் தகவல்

image

நடிகை மினு முனீர் அண்மையில் போக்சோ சட்டத்தில் கைதானார். இது தொடர்பாக போலீசார் விசாரிக்கும் சூழலில், ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகிவுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட இளம்பெண் சம்பவம் நடந்த போது சிறுமியாக இருந்ததால் சென்னையில் தங்கிய வீடு, குற்றவாளிகள் அடையாளம், ஓட்டல் குறித்த விவரங்களை மறந்துள்ளதாகவும், இதனால் வழக்கை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியாமல் போலீசார் திணறுவதாகவும் கூறப்படுகிறது.

News August 17, 2025

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

image

* அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
* அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
* உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.
* சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.
* கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

News August 17, 2025

அந்த கூலியும் காலி, இந்த கூலியும் காலி: சீமான்

image

துப்புரவுப் பணிகளை கூட தனியாரிடம் ஒப்படைத்தால், மாநகராட்சி எதற்கு என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 6 அறிவிப்புகளை வெளியிட்ட CM ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி சென்றது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அந்த நிகழ்வின் இயக்குநர் மேயர் பிரியா என்றும், அதனை அவர் சரியாக இயக்கவில்லை என்றார். ரஜினியின் கூலியும் காலி, மேயர் பிரியா இயக்கிய இந்த கூலியும் காலி என விமர்சித்தார்.

error: Content is protected !!