News August 12, 2024
கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கலசப்பாக்கத்தில் உள்ள மிருகண்ட நதி அணையின் நீர்மட்டம் தற்பொழுது வினாடிக்கு 255 கன அடியாக உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீரை வெளியேற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக காந்தபாளையம், நல்லான் பிள்ளைபெற்றால், கங்காலமாதேவி, சிறுவள்ளூர், எலத்தூர், வில்வாரணி ஆகிய பகுதியில் ஆற்றங்கரை ஓரத்தில் வசித்து வரும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறும்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 23, 2025
தி.மலை முதலமைச்சர் கோப்பைக்கான தேதிகள் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான தேதிகளை திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அலுவலர் அறிவித்துள்ளார். அதன்படி இதில் (26-08-2025) முதல் (10-09-2025) வரை மாவட்ட விளையாட்டு அரங்கில் பல்வேறு பிரிவுகள் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவருக்கு சான்றிதழ் பதக்கம் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
News August 23, 2025
தி.மலையில் ஆட்டோக்கு அதிக காசு கேட்டா இத பண்ணுங்க

ஆட்டோக்கள் மீட்டருக்கு மேல் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் உள்ளது. விதிமுறையின்படி ஆட்டோக்கள் முதல் 2 கி.மீ க்கு ரூ.30ம், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கி.மீ க்கும் ரூ.12, காத்திருப்பு கட்டணம் நி.மி க்கு ரூ.1.50 வசூலிக்கலாம். இரவு(11-5) நேரத்தில் 50% கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம். கூடுதல் கட்டணம் வசூலித்தால் உங்க பகுதி <
News August 23, 2025
காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

2-ம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் வருகிற 28ந் தேதி (வியாழக்கிழமை) முதல் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.