News March 18, 2025

கரூர்: வேண்டியதை நிறைவேற்றும் தெற்கின் திருப்பதி

image

கரூரில் தாந்தோன்றி மலையில் கல்யான வெங்கட்ரமணா பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் தெற்கின் திருப்பதி என அழைக்கப்படுவது தனி சிறப்பாகும். இக்கோயிலில்
குழந்தை வரம் மற்றும் வாழ்வில் நலம் வேண்டி துலாம் பாரம் செலுத்தினால் வேண்டியது கைகூடும் என்பது ஐதீகம். மேலும், திருமணம் ஆகாதவர்கள் பெருமாளிடம் பிராத்தித்து, திருமணமான பிறகு திருக்கல்யாண உற்சவமும் நடத்துவார்கள்.

Similar News

News November 12, 2025

கரூர் ரயில்வே நிலையத்தில் எஸ்.பி திடீர் ஆய்வு

image

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வாகனச் சோதனை மற்றும் இரவு ரோந்து பணிகளை மாவட்ட எஸ்.பி ஜோஸ் தங்கையா நேரில் சென்று ரயில்வே நிலையத்தில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் அவ்வழியாக வந்த சந்தேகிக்கப்படக்கூடிய வாகனங்கள் நிறுத்தப்பட்டு, ஓட்டுநர்களின் உரிமம் மற்றும் வாகன ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பையும், சட்ட ஒழுங்கையும் உறுதி செய்தார்.

News November 12, 2025

தமிழ் கனவு மூன்றாம் கட்ட நிகழ்ச்சி

image

கரூர் மாவட்டத்தில் தமிழ் கனவு நிகழ்வு மூன்றாம் கட்டமாக, தளவாபாளையம் M.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நிகழ்ச்சியில் “அறிவின் வழியே மானுட விடுதலை” என்ற தலைப்பின் கீழ் வழக்கறிஞர் மதிவதனி, கல்லூரி மாணவ மாணவியர்களிடையே நாளை 13.11.2025 அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ள நிலையில் சொற்பொழிவு ஆற்ற உள்ளார் என மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.

News November 12, 2025

கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

கரூரில் பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டத்தின்கீழ், (PM-KISAN) தனித்துவ அடையாள அட்டை பெற்று பி.எம்.கிஷான் 21வது தவணை தொகை பெற முன்னோர்கள் பெயரில் பட்டா உள்ள விவசாயிகள் தங்களது பெயரில் பட்டா மாறுதல் பெற்று, அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண் பெற்றால் மட்டுமே பி.எம்.கிஷான் அடுத்த தவணை தொகை தொடர்ந்து கிடைக்கும். என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!