News September 10, 2025

கரூர்: வீடு புகுந்து நகைக் கொள்ளை!

image

கரூர்: புகழூர் நகராட்சியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர்(58). இவர் பணிக்குச் சென்றுவிட்டு மீண்டும் வந்து வீட்டைத் திறந்து பார்க்கும் போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தற்போது அப்பகுதி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News September 10, 2025

கரூரில் மானியத்துடன் கடனுதவி அறிவிப்பு

image

கரூரில் வாழும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் மூலமாக எளிய முறையில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 10, 2025

கரூர்: மதுவில் விஷம் கலந்து தற்கொலை!

image

கரூர்: வீரராகியம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று(செப்.9) மன விரக்தியில் மதுவில் பூச்சிக்கொல்லி அருந்தி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் நேற்று(செப்.9) வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 10, 2025

கரூரில் வேலையுடன் இலவச பயிற்சிகள்!

image

கரூர் மக்களே..,தமிழக அரசின் ’வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ், இலவச பயிற்சியுடன் வேலையும் வழங்கப்படுகிறது.
▶️Tally பயிற்சி
▶️விற்பனை பொருள் நிர்வாகி
▶️பால் பண்ணையப் பயிற்சி
▶️பிராட்பேண்ட் தொழில்நுட்ப பயிற்சி
▶️தையல் பயிற்சி
இவைகளுக்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>>. உடனே அனைவருக்கும் SHARE.

error: Content is protected !!