News December 4, 2024

கரூர் விவசாயிகளுக்கு மானிய தொகை: ஆட்சியர் அறிவிப்பு

image

கரூரில் வாழும் விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் விளைப்பொருட்களை ஏற்றுமதி மேற்கொள்வதற்காக தமிழக அரசு மானியத்தொகையாக ரூ.15,000/- வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள வேளாண் துணை இயக்குநர், வேளாண் வணிகம், 9442556138 மற்றும் வேளாண்மை அலுவலர்கள் 9500416678, 9942286337, 9489508735 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் கொடுத்துள்ளார்.

Similar News

News November 5, 2025

கரூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

தற்போது அவசர உதவிக்கு 100, ஆம்புலன்ஸ் சேவைக்கான 108, தீயணைப்பு துறைக்கான 101 போன்ற எண்கள் பதியப்பட்டே வருகின்றன. இது தவிர நாம் சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள் சில உள்ளன அதை பற்றி பார்க்கலாம். பெண்களுக்கான அவசர உதவி – 1091, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு – 1098, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு – 181, பெண்கள், குழந்தைகள் காணாமல் போனால் – 1094 இந்த முக்கிய எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 5, 2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 முக்கிய தினங்கள் 4 நவம்பர் முதல் 4 டிசம்பர் 2025 வரை பெயர் சேர்த்தல் மற்றும் மறுப்பு தெரிவித்தல் 9 டிசம்பர் முதல் ஜனவரி 8 2026 வரை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் 9 டிசம்பர் 2025 செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மீ தங்கள் இ.ஆ.ப தெரிவித்துள்ள செய்தி

News November 5, 2025

கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய கொடூரம்!

image

கரூர் மாவத்தூர் ஊராட்சி குளக்காரன்பட்டியை சேர்ந்த 21 வயதுடைய கல்லூரி மாணவி அதே ஊரை சேர்ந்த டிராக்டர் டிரைவர் ரஞ்சித் (25) காதலித்து வந்ததாக தெரிகிறது. ரஞ்சித்தின் நடவடிக்கை பிடிக்காததால் மாணவி காதலை முறித்துக் கொண்டார். ஆத்திரமடைந்த ரஞ்சித் தூங்கிக் கொண்டிருந்த மாணவி மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றி உள்ளார். கரூர் அரசு மருத்துவமனையில் மாணவி சிகிச்சை. ரஞ்சித்தை பாலவிடுதி போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!