News August 26, 2025
கரூர் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி காப்பீடு திட்டம்

கரூர் மாவட்டத்தில் தற்போது 2025 காரீப் பருவத்தில் சாகுபடி செய்யும் வாழை, மரவள்ளி, மஞ்சள், தக்காளி மற்றும் வெங்காயம் போன்ற பயிா்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்வதன் மூலமாக காலநிலை மாற்றங்களால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கலாம்.
மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தகவல். அளித்துள்ளார்
Similar News
News August 26, 2025
கரூரில் வாகன சோதனையில் 955 வாகனங்கள் வழக்குப்பதிவு

கரூர் மாநகரில் குற்ற தடுப்பு நடவடிக்கையாகவும், போக்குவரத்து விபத்துகளை குறைப்பதற்காகவும் வார இறுதி நாட்களில் (22.08.25 முதல் 24.08.25) 40 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டதில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல், அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல் மற்றும் கைபேசியில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக 955 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
News August 25, 2025
கரூரில் கிராம உதவியாளர் வேலை! நாளை கடைசி

கரூர் மாவட்டத்தில் 27 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆக.26 நாளைக்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு <
News August 25, 2025
ரயில்வே ஸ்டேஷன்களில் மூடப்பட்ட கழிப்பறைகள்

கரூர் வழியாக திருச்சி, ஈரோடு, திண்டுக்கல், சேலம் மார்க்கமாக நாள்தோறும் சிறப்பு ரயில்கள் சென்று வருகின்றன. நாள்தோறும், ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். ஆனால், பெரும்பாலான ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கழிப்பறைகள் மூடி வைக்கப்பட்டுள்ளன. இதனால், ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை!