News November 1, 2025
கரூர்: வாகனம் மோதி விபத்து!

பில்லாபாளையம் அடுத்த சுண்ணாம்புக்காரத் தெருவை சேர்ந்த சஞ்சீவிராமன்(35). இவர் நேற்று தனது பைக்கில் வீரக்குமாரன்பட்டி சாலையில் தனது தோட்டத்திற்கு சென்றபோது எதிரே மகுடீஸ்வரன் ஒட்டி வந்த தோஸ்த் வாகனம் மோதியதில் சஞ்சீவிராமன் வலது கால் தொடையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை. அவரது தந்தை புருஷோத்தமன் புகாரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
Similar News
News November 1, 2025
கரூர்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி?

கரூர் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)
News November 1, 2025
கரூர்: Google Pay / PhonePe / Paytm பயணிகள் கவனித்திற்கு!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 1, 2025
கரூர்: இன்று 11 மணிக்கு..! மக்களே ரெடியா

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று நவ.1-ம் தேதி காலை 11 மணி அளவில் கிராமசபை கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறும். இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, வட கிழக்கு பருவமழை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். கிராம மக்கள் கலந்துகொண்டு ஆலோசனைகள் தெரிவிக்கலாம். (SHARE)


