News January 3, 2026
கரூர்: வாகனத்தில் இருந்து தடுமாறி விழுந்தவர் உயிரிழப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பஞ்சப்பட்டி அடுத்த காரைக்குடியைச் சேர்ந்தவர் அழகப்பன் (75). இவர் கடந்த வாரம் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் கள்ளை மாரியம்மன் கோவில் செல்வதற்காக கே. துறையூர் சாலையில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மகன் சுதாகர் புகாரில் தோகைமலை போலீசார் இன்று வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News January 5, 2026
கரூரில் எங்கெல்லாம் மின்தடை

கரூரில் நாளை(ஜன.6) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. (SHARE)
News January 5, 2026
கரூரில் எங்கெல்லாம் மின்தடை

கரூரில் நாளை(ஜன.6) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. (SHARE)
News January 5, 2026
கரூர்: குளித்தலைஅருகே அதிரடி கைது!

குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கணேசபுரம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ராமதாஸ் (57). இவர் தனக்கு சொந்தமான வீட்டின் அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற ராமதாஸ் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


