News April 9, 2026
கரூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்..மிஸ் பண்ணிடாதீங்க

பயணிகள் வசதிக்காகத் திருச்சி – பெங்களூரு இடையே ஏப்ரல் 28 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் செவ்வாய் அதிகாலை 5:30-க்கு திருச்சியில் புறப்பட்டு கரூர், நாமக்கல், சேலம் வழியே மதியம் 1:30-க்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக, செவ்வாய் மதியம் 3:00-க்கு பெங்களூருவில் கிளம்பி இரவு 10:30-க்கு திருச்சியை அடையும். சேலம் வழியே செல்லும் இந்த ரயில் பயணிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.
Similar News
News April 10, 2026
கரூர்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல், பரிசீலனை மற்றும் வாபஸ் பெறுதல் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. இறுதி பட்டியலின்படி கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை ஆகிய 4 தொகுதிகளில் மொத்தம் 166 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் கரூர் தொகுதியில் 79, அரவக்குறிச்சியில் 30, கிருஷ்ணராயபுரத்தில் 28, குளித்தலையில் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
News April 10, 2026
கரூர்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல், பரிசீலனை மற்றும் வாபஸ் பெறுதல் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. இறுதி பட்டியலின்படி கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை ஆகிய 4 தொகுதிகளில் மொத்தம் 166 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் கரூர் தொகுதியில் 79, அரவக்குறிச்சியில் 30, கிருஷ்ணராயபுரத்தில் 28, குளித்தலையில் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
News April 10, 2026
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பட்டியல்

கரூர் மாவட்டத்தில் இன்று இரவு பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக டிஎஸ்பி பி.ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் நகரம், அரவக்குறிச்சி மற்றும் குளித்தலை உட்கோட்டங்களில் உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் எஸ்.ஐ மற்றும் ஏட்டு அந்தஸ்தான அதிகாரிகள் ரோந்து பணியில் இருப்பார்கள்.


