News September 27, 2025
கரூர்: வடமாநிலப் பெண் தூக்கிட்டு தற்கொலை!

கரூர்: மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ரபியுல்லா காரிக்கர். இவரது மனைவி சிரிவ்வா பிபி(36) இவர் கரூரில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், சரிவ்வா பிபியின் ரூ.7,000 பணத்தை ரபியுல்லா எடுத்ததாகத் தெரிகிறது. இதனால், கணவன் – மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சரிவ்வா பிபி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
Similar News
News February 3, 2026
கரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News February 2, 2026
கரூர்: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

கரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 2, 2026
கரூர்: உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

▶️ மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!


