News April 9, 2024

கரூர்: ரூ.71,000 பறிமுதல் செய்த பறக்கும் படை

image

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கான பறக்கும் படை குழு காவல்காரன்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காவல்காரன்பட்டியில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில், வாழப்பாடி வட்டம், குள்ளம்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரிடம் ரூ.71,000 இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. ஆவணங்களின்றி கொண்டு வந்த, பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Similar News

News November 7, 2025

கரூர்: புகழூரில் இலவச கண் பரிசோதனை முகாம்

image

கரூர் மாவட்டம் புகழூரில் 9 நவம்பர் 2025 ஞாயிற்றுகிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை TNPL மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் கண் குறைபாடு, பார்வை பிரச்சனை, கண் வலி பரிசோதனை, மருந்துகள் மற்றும் தேவையான கண்ணாடிகள் வழங்கப்படும் .பொதுமக்கள் அனைவரும் இலவசமாக இம்முகாமில் பங்கேற்று மருத்துவ சேவைகளில் நன்மை பெறலாம்

News November 6, 2025

கரூர்: சிறைக்காவலர் பதவிக்கான எழுத்துத்தேர்வு

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு காவலர் மற்றும் சிறைக்காவலர் பதவிக்கான எழுத்துத்தேர்வு வருகின்ற 09.11.2025 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணிவரை 1) கரூர் கொங்கு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆகிய பள்ளிகளில் நடைபெறுகிறது. இதற்கான சிறப்பு பேருந்தும் உள்ளது.

News November 6, 2025

கரூரில் வாகன விபத்து; 5 வயது சிறுவன் படுகாயம்

image

கரூர், சின்ன ஆண்டான் கோவில் சாலையில், ஹரி கிருஷ்ணன் தனது மகன் சபரீஷ் (5) உடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, லிவிக்கா என்ற பெண் தனது இருசக்கர வாகனத்தை ஹரி கிருஷ்ணன் மீது மோதியுளார். இதில் சிறுவன் சபரீஷ் காயமடைந்து கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இச்சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் வழக்கை பதிவு செய்தனர் மற்றும் விசாரணை நடந்து வருகிறது.

error: Content is protected !!