News January 1, 2025
கரூர்: முதியவர் ஹெல்மெட் விழிப்புணர்வு பயணம்

திருப்பூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி (66), சமூக ஆர்வலர். கடந்த 2005 முதல் டூவீலரில் சென்று ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். டிசம்பர் 5ல் திருப்பூரில் விழிப்புணர்வு பயணத்தை தொடர்ந்த சிவசுப்பிரமணி நேற்று கரூர் வந்தார். டிராபிக் போலீசார் உதவியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பிறகு நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதிக்கு புறப்பட்டார்.
Similar News
News September 15, 2025
கரூர்: BE படித்தால் கை நிறைய சம்பளம்!

திருப்பூர் பட்டதாரிகளே.., மத்திய அரசு நிறுவனமான ‘இஞ்ஞினியர்ஸ் இந்தியா’-வில் காலியாக உள்ள 48 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு தேர்வெழுத அவசியம் இல்லை. மாதம் ரூ.72,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 15, 2025
கரூர்: டிகிரி முடித்தால் ரயில்வே துறையில் வேலை!

கரூர் மக்களே.., இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா..? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 15, 2025
கரூர்: முன் விரோத தகராறில் அடி உதை!

கரூர்: நொய்யல் அருகே உள்ள சேமங்கி கிருஷ்ணா இல்லம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(74) – அருணா(72) ஆகியோரின் மகன் ரவி(46). இவருக்கும், இவரது சகோதரர் குணாளன்(50) என்பவருக்கும் ஓர் இடப் பிரச்னையால் முன் விரோதம் உள்ளது. இந்நிலையில், இதன் காரணமாக ரவியை குணாளன் மற்றும் பெற்றோர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதில் ரவி காயமடைந்தார். இதுகுறித்து போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.