News February 7, 2026
கரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News February 10, 2026
கரூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

கரூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News February 10, 2026
கரூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். கரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04324-296570, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free 1800 4252 441,சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)
News February 10, 2026
கரூர்: பாஜக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

பிப்ரவரி 10 இன்று கரூர் தபால் தலைமை நிலையம் அருகில் திமுக ஆட்சியில் தினம் தினம் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை கண்டித்து கரூர் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பாக மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பி வி செந்தில்நாதன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி தலைவி பிரியா ஈஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார். மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


