News January 31, 2026

கரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News February 5, 2026

தோகைமலை அருகே தட்டி தூக்கிய போலீஸ்: இருவர் கைது

image

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்.டி மலை, கீழவெளியூர் கடைவீதி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் லாட்டரி விற்ற வேலு 61, ராஜேந்திரன் 55 ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் ஏற்கனவே தலா 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News February 5, 2026

குளித்தலை அருகே அதிகாலையில் சோகம்: ஒருவர் பலி!

image

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (37). இவர்  கிரேன் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். அதிகாலை குளித்தலை சுங்ககேட்  சாலையில் பெட்ரோல் பங்க் அருகே வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளனர். அப்போது அஜித்குமார் முன் சக்கர டயரை சோதனை செய்தபோது ஓட்டுநர் கிரேனை இயக்கியதில் அஜித்குமார் தொடை மீது ஏறியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

News February 5, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்!

image

கரூர் மாவட்டத்தில், 10th தோல்வி பெற்றவர்கள் முதல் முதுகலை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிரம்ப பெற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மாதந்தோறும் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை www.tnvelaivaaippu.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து ஜனவரி முதல் மார்ச்- 2026க்குள் வேலைவாய்ப்பு மையத்தில் நேரில் அளிக்க வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!