News October 16, 2025

கரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவிப்பின்படி, தீபாவளி நாளில் காலை 6–7 மணி மற்றும் இரவு 7–8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி. அதிக ஒலி மற்றும் தொடர்ச்சியான சரவெடிகள் தடைசெய்யப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே பட்டாசு வெடிக்கக்கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 17, 2025

கரூரில் சம்பவ இடத்திலே துடிதுடித்து பலி!

image

கரூர் வாங்கல் அருகே செம்மடை சாலையில், மணிகண்டன் (27) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அதே வழியில் விஜயகுமார் ஓட்டி வந்த கனரக வாகனம் மணிகண்டன் மீது மோதியது. இதில் தலை நசுங்கி மணிகண்டன் (27) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

News October 17, 2025

கரூரில் விஜய்க்கு 23 % ஆதரவு; வெளியான ரிப்போர்ட்!

image

கரூர் சம்பவத்திற்கு பிறகு த.வெ.க. செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது குறித்து மீண்டும் தமிழகம் முழுவதும் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கருத்துக்கணிப்பு முடிவில் கரூர் சம்பவத்தால் விஜய்க்கு செல்வாக்கு குறையவில்லை எனவும் த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்த ஆய்வு முடிவுகள் வைரலாக பரவி வருகிறது.

News October 17, 2025

கரூர்: குளித்தலை அருகே சட்டவிரோத மது விற்பனை

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வேங்கடத்தான்பட்டி மகன் ஜெயக்குமார் (46) தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது குறித்து நங்கவரம் போலீசார் தகவல் பெற்றனர். அங்கு சென்று அதனை நிரூபித்து, ஜெயக்குமாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, இன்று கைது செய்தனர். மேலும், விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

error: Content is protected !!