News October 1, 2025
கரூர் மாவட்ட ஆட்சியர் கலந்துகொள்ளும் நிகழ்வுகள்!

கரூரில் காந்திஜெயந்தியை முன்னிட்டு நாளை (02.10.2025) காலை 10 மணியளவில் தாந்தோணி மலை கதர் அங்காடியில் காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த பின் சிறப்பு விற்பனை துவக்கி வைத்து, மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி 10.15 மணியளவில் திருமுருகன் மஹாலில் (சுங்க கேட் அருகில்) ரிப்பன் வெட்டி கரூர் மாவட்ட ஆட்சி தலைவர் தங்கவேல் துவக்கி வைக்க உள்ளார்.
Similar News
News October 2, 2025
கரூர்: ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் ஆட்சியர் அறிவிப்பு!

கரூரில் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு அக்டோபர் 5, 6 ஆகிய தேதிகளில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று குடிமைப்பொருட்களை விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே பயனாளர்கள் மேற்கண்ட தேதிகளில், குடிமைப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
News October 1, 2025
கரூர்: மின்சார துறையில் வேலை – ரூ.59,900 வரை சம்பளம்!

கரூர் மக்களே..தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் (TANGEDCO) – கள உதவியாளர் வேலைவாய்ப்பு!
கரூர் மாவட்டம் மற்றும் மற்ற பகுதிகளுக்கேற்ப பணியிடங்கள்
1)மொத்த காலியிடங்கள்: 1,794
2)கல்வித்தகுதி: ITI (ஏதேனும் துறையில்)
3)சம்பளம்: ரூ.18,800 – ரூ.59,900 வரை
4)விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி: 02-10-2025
5)விண்ணப்பிக்கவும், முழு விவரங்களை தெரிந்துகொள்ளவும் இங்கே <
News October 1, 2025
கரூர்: வடகிழக்கு பருவ மழை குறித்து முன்னெச்சரிக்கை!

கரூர் மாவட்ட தோட்டக்கலை பயிர் செய்திருக்கும் விவசாயிகள், வடகிழக்கு பருவ மழையின் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, கரூர் கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில்; பல்லாண்டு பயிர்களான மா, பலா, கொய்யா, தென்னை, பாக்கு சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும், மரங்களின் எடையை குறைக்கும் வகையில், கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.