News August 13, 2024

கரூர்: மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

image

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அங்கு மனு அளிக்க வந்த வெங்கமேட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாபு என்பவர் பெட்ரோலை உடம்பில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பாபு கூறுகையில் “எனக்கு வீடு கட்டித் தரக்கோரி பலமுறை மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.

Similar News

News November 9, 2025

கரூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

கரூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல், இந்த <>லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 9, 2025

கரூர் அருகே விபத்து: ஒருவர் படுகாயம்

image

கரூர், பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் முருகேசன்(70). இவர் நேற்று சாலையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, அதே சாலையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓட்டி வந்த கார் மோதியது. இதில் முருகேசன் படுகாயம் அடைந்து, கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 9, 2025

கரூர்: ரூ.7,500 பரிசு… மக்களே உஷார்!

image

கரூர் மக்களே, வங்கிகளின் அசல் லோகோவை பயன்படுத்தி ரூ.7,500 வெகுமதி தருவதாக கூறி, பலரது ‘வாட்ஸ் ஆப்’ எண்ணுக்கு ஒரு ‘லிங்க்’ வருவதாக புகார் எழுந்துள்ளது. அது மோசடி செய்யும் நோக்குடன் சைபர் குற்றவாளிகளால் அனுப்பப்படும் ‘லிங்க்’ ஆகும். விவரம் தெரியாத பலரும் இதனால் ஏமாற்றப்படலாம். அந்த லிங்கை கிளிக் செய்தல் பணம் பறிபோகலாம். எனவே, உஷாரா இருங்க. இதுபோன்ற லிங்கை நம்பி ஏமாற வேண்டாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!