News April 11, 2024
கரூர்: மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கரூர் மாவட்டத்தில் மத்திய மாநில் அரசுகளிடம் உதவித்தொகை பெறும் மாணவ, மாணவிகளின் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை பயன்படுத்திய மர்மநபர்கள் சிலர் அதிகாரிகள் என மாணவ, மாணவிகளை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு, அவர்கள் அனுப்பும் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்ய சொல்லி பணத்தை பறித்துள்ளனர். இந்நிலையில், உதவித்தொகை சம்மந்தமாக எந்த ஒரு அதிகாரியும் போனில் தொடர்பு கொள்ளமாட்டார்கள் என கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
Similar News
News April 7, 2025
கரூர் அங்கன்வாடியில் வேலைவாய்ப்பு!

கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நேரடி நியமனம் நடைபெறுகிறது. ▶️முதன்மை அங்கன்வாடி பணியாளர் – 3 இடங்கள் ▶️குறு அங்கன்வாடி பணியாளர் – 14 இடங்கள்▶️அங்கன்வாடி உதவியாளர் – 44 இடங்கள் நிரப்படவுள்ளது. ஊதியமாக ரூ.7700 முதல் 24200 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் <
News April 7, 2025
தேனீ கடித்ததில் பனை மரத்திலிருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு

கரூர் வாங்கல் வஉசி தெருவை சேர்ந்தவர் தென்னரசு (33). இவர் நேற்று சங்க கொட்டாய் முனியப்பன் கோவில் அருகே உள்ள பனைமரத்தில் ஏறி உள்ளார். அங்கு மரத்தில் மேலிருந்த .தேனீ கடித்ததில் அங்கிருந்து கீழே விழுந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் உடல் கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரின் மனைவி பிரியங்கா புகாரின் பேரில் வாங்கல் போலீசார் நேற்று வழக்கு பதிவு.
News April 6, 2025
கரூர் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்படும் ரயில் எண்.56809 திருச்சிராப்பள்ளி – ஈரோடு பயணிகள் ரயில், ஏப்ரல் 08 & 11, 2025 அன்று கரூர் ரயில் நிலையத்தில் குறுகிய பயண நிறுத்தம் செய்யப்படும். இந்த ரயில் திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்; அந்த நாட்களில் கரூரில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படாது. என ரயில்வே அதிகாரி அறிவித்துள்ளார்.