News December 21, 2025
கரூர்: மது விற்றவர்கள் மீது வழக்கு பதிவு

கரூர்: நங்கவரம் அருகே செந்தில்குமார் என்பவரும், மற்றும் இனுங்கூர் பகுதியில், வெங்கடேஷ் என்பவரும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்தனர். இந்த தகவல் அறிந்த நங்கவரம் போலீசார் நேற்று இரவு நேரில் சென்று இருவர்களை மடக்கி பிடித்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 25, 2025
கரூர் மக்களே இனி அலைச்சல் வேண்டாம்!

மக்களே பல்வேறு அரசு சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
ஆதார் : https://uidai.gov.in/
வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
பான் கார்டு : incometax.gov.in
தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
ஓட்டுநர் உரிமம் – https://parivahan.gov.in/
பட்டா தொடர்பான விவரங்களுக்கு – eservices.tn.gov.in
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 25, 2025
கரூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

கரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 25, 2025
கரூர் பெண் குண்டர் சட்டத்தில் கைது!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் வீட்டில் பட்டப்பகலில் 30 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில் கைதான ரமணி (36) மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த இவர் ஒரு ‘சரித்திர பதிவேடு’ குற்றவாளி ஆவார். சேலம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.


