News September 10, 2025
கரூர்: மதுவில் விஷம் கலந்து தற்கொலை!

கரூர்: வீரராகியம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று(செப்.9) மன விரக்தியில் மதுவில் பூச்சிக்கொல்லி அருந்தி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் நேற்று(செப்.9) வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News September 10, 2025
கரூர்: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெறும் இடங்கள்

கரூர் மாநகராட்சியில், வார்டு எண்.6,10-ற்க்கு வெங்கமேடு முத்து மஹாலிலும், கடவூர் வட்டாரத்தில், முள்ளிப்பாடி மற்றும் பாலவிடுதி ஆகிய ஊராட்சிகளுக்கு பாலவிடுதி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்திலும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நாளை 11.09.2025 நடைபெறவுள்ளது. என கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அறிவித்துள்ளார். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News September 10, 2025
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பொறுப்பேற்பு

கரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக அபிராமி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற இணைப்பதிவாளருக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை கோட்ட பகுதிகளுக்கு உட்பட்ட கூட்டுறவு சங்க செயலாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் என பலரும் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
News September 10, 2025
கரூர்: பழங்குடி இன மக்களுக்கு குரூப் 1 தேர்வு பயிற்சி!

கரூரில் வாழும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1- 2025 முதல்நிலை தேர்வில் (Preliminary Examination) தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு தாட்கோ சார்பாக முதன்மைத் தேர்விற்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. WWW.tahdco.com என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவிப்பு செய்துள்ளார்.