News September 20, 2025
கரூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், 22.09.2025 ஆம் தேதியன்று மாலை 4.00 மணியளவில், எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு, எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News September 20, 2025
கரூர்: கிராம வங்கியில் வேலை! APPLY NOW!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம், தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள, Office Assistant, உள்ளிட்ட 13,217 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் இரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (செப்.21) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை<
News September 20, 2025
கரூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கரூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செப்.20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஆண்டிசெட்டிபாளையம், கோடந்தூர், வடகரை, காட்டாம்பட்டி, சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், எல்லமேடு, எலவனூர், புஞ்சை, நஞ்சை காளக்குறிச்சி, அணைப்புதூர், க.பரமத்தி, நெடுங்கூர், பூலாம்பட்டி, கார்வழி, தென்னிலை, மலைக்கோவிலூர், கனகாபுரி, நொய்யல், அத்திப்பாளையம், வடக்கு நொய்யல், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News September 20, 2025
கரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.09.2025 அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.கரூர் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.