News October 19, 2025
கரூர்: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில், நவம்பர் மாதத்துக்கான ரேஷன் அரிசியை தற்போது (அக்டோபர் மாதத்தில்) பெறலாம் என ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக பொதுவினியோக திட்ட அட்டையாளர் குடும்பங்கள் சிரமம் அடையாத வகையில் அரிசியை இம்மாதத்திலேயே பெறலாம் என தெரிவித்துள்ளார். அக்டோபர் மாத அரிசியை பெற்றிருந்தாலும், பெறாதவர்களும் நவம்பர் மாத ஒதுக்கீட்டை இம்மாதமே பெறலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News October 19, 2025
கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் வேளாண் விளைபொருட்களுக்கான மதிப்புக்கூட்டல் அலகுகளை அமைப்பதற்கு மானியம் வழங்கப்படும் என கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதற்காக 2025-26 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், ஒரு கோடி ரூபாய் இலக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இந்த மானியத்தைப் பெற 9489508735, 9500416678, 9942286337 அழைக்கவும்.
News October 19, 2025
சின்னதாராபுரத்தில் குளிக்க சென்றவர் சடலமாக மீட்பு!

சின்னதாராபுரம் அமராவதி ஆற்று பாலத்தில் கீழ், மேகலா என்பவர் துணிகளை துவைத்து கொண்டு குளிக்க சென்றுள்ளார். இவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பிறகு தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சின்னதாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
News October 19, 2025
கரூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!