News December 18, 2025
கரூர்: பைக் மோதி நடந்த சென்ற மூதாட்டி படுகாயம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பாக்காபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாப்பா (66). இவர் மலையாண்டிபட்டி சாலையில் நடந்து சென்ற போது பின்னால் திருமானிக்கம் ஒட்டி வந்த பேட்டரி பைக் மோதியதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். பாப்பா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரின் மகள் சோப்பாயி புகாரில் குளித்தலை போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரணை
Similar News
News December 19, 2025
கரூர்: ரூ.1 லட்சம் மானியம் – கலெக்டர் அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் தோட்டக்கலை துறையில் பிரதம மந்திரி தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் டிராகன் பழம் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு 40 சதவீதம் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. எனவே, இந்த திட்டத்தில் பயனடைய விவசாயிகள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
News December 19, 2025
கரூர்: மின்தடை அறிவிப்பு – ரெடியா இருங்க!

மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக நாளை (டிச.20) தென்னிலை, க.பரமத்தி, நொய்யல், ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆண்டிசெட்டிப்பாளையம், அரங்கப்பாளையம், தொக்குப்பட்டி, சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், டி.வெங்கிடாபுரம், தென்னிலை, மொஞ்சனூர், பூலாம்பட்டி, அத்திபாளையம், குப்பம், நொய்யல், குளத்துபாளையம் ஆகிய பகுதிகளில் இருக்காது.
News December 19, 2025
கரூர் துயரம்; விஜய் குறித்து பரபரப்பு போஸ்டர்கள்

கரூர் மாவட்டத்தில், வடிவேல் நகர் பகுதியில் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் 41 உயிர்கள் பறிபோய் உள்ளது. இதன் தொடர்பாக ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் விஜய் பற்றி தனித்துவ போஸ்டரால் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த போஸ்டரில் இங்கிருந்து ஆடியோ லான்ச்சுக்கு மலேசியா செல்கிறீர்கள், மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை புரிகிறீர்கள், ஏன் கரூருக்கு செல்லவில்லை என வாசகம் பதியப்பட்டிருந்தது.


