News April 3, 2025
கரூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

கரூர், வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (24). இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ் 2 மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை, கரூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகிறார்.
Similar News
News November 13, 2025
கரூரில் மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி

கரூர் மாவட்டம் மண்மங்கலம் ஒன்றியம் தளவாபாளையம் M.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் இன்று (13.11.2025) காலை 9 மணிக்கு “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி 3ம் கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் தொன்மையினை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் கல்லூரி மாணாக்கர்களுக்கு கலந்து கொள்கின்றனர் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
வாக்கு சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆய்வு கூடடம்

கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இ.ஆ.ப., தலைமையில் இன்று (12.11.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026க்கான கணக்கீட்டு படிவத்தினை வழங்கும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
News November 12, 2025
கரூர் ரயில்வே நிலையத்தில் எஸ்.பி திடீர் ஆய்வு

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வாகனச் சோதனை மற்றும் இரவு ரோந்து பணிகளை மாவட்ட எஸ்.பி ஜோஸ் தங்கையா நேரில் சென்று ரயில்வே நிலையத்தில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் அவ்வழியாக வந்த சந்தேகிக்கப்படக்கூடிய வாகனங்கள் நிறுத்தப்பட்டு, ஓட்டுநர்களின் உரிமம் மற்றும் வாகன ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பையும், சட்ட ஒழுங்கையும் உறுதி செய்தார்.


