News August 6, 2025
கரூர்: நாளை திமுக சார்பில் அமைதி பேரணி

கரூர் மாவட்ட திமுக சார்பில், கலைஞர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேரணி நாளை (ஆக 07) காலை 9.30 மணிக்கு கரூர் திமுக அலுவலகத்தில் இருந்து பஸ் நிலையம் வரை நடைபெற உள்ளது. மேலும் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வும் நடைபெற உள்ளதாக கரூர் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 7, 2025
கரூர்: டிகிரி போதும் வங்கியில் வேலை!

கரூர் மக்களே, மிழ்நாடு இந்தியன் வங்கியில் 277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தாலே போதுமானது. இதற்கு முன் அனுபவம் அவசியம் இல்லை. விண்ணப்பிக்க இன்றே (ஆக.7) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள், உடனே இங்கு <
News August 7, 2025
கரூர்: கஞ்சா விற்பனை குறித்து புகார் அளிக்கலாம்!

கரூர் நகர காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தால் சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாரேனும் கஞ்சா போதை பொருட்களை விற்றாலோ, வைத்திருந்தாலோ, கீழ்கண்ட தொலைபேசி எண்களுக்கு தகவல் தருமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் காவல் துறை ஆய்வாளர் 99429-04717 சார்பு ஆய்வாளர் 94981-61773 ஆகிய எண்களில் புகார் கொள்ளலாம்.
News August 6, 2025
கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம்

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமையில் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சுதா, துணை மேயர் சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த மாமன்ற கூட்டத்தில் கரூர் மாநகராட்சிக்கு செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.