News October 30, 2025

கரூர்: தெரிய வேண்டிய வாட்ஸ் ஆப் நம்பர்!

image

கரூர் மக்களே..பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News October 30, 2025

கரூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 30, 2025

கடவூர் அருகே வீடு புகுந்து 13 பவுன் நகை திருட்டு!

image

கடவூர் தாலுகா மாவத்தூர் அடுத்த சின்னாம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (60). கறிக்கடை வியாபாரியான இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து மோதிரம், தங்க காசு, செயின் உள்ளிட்ட 13 பவுன் தங்க நகைகள், வெள்ளி நகைகள் திருடு போனது தெரியவந்தது. பழனிச்சாமி அளித்த புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

News October 30, 2025

கரூர் கலெக்டர் அறிவிப்பு!

image

கரூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை காலத்தில் தென்னை மரங்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தகவல் அளித்துள்ளார். இதில் அதிவேக புயல் எச்சரிக்கை விடுக்கப்படும் காலங்களில், புயலுக்கு முன் தேங்காய் இளநீரை அறுவடை செய்தல் மூலம் மரத்தின் பாரத்தை குறைத்து மரங்கள் வேரோடு விழுவதைத் தவிர்க்கலாம். மரத்தை சுற்றியும் மண்களைப் போட்டு பலப்படுத்தலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

error: Content is protected !!