News October 15, 2025
கரூர்: டூவீலர் மெக்கானிக் நெஞ்சு வலி காரணமாக பலி

கரூர் அருகே வாழ்வார்மங்கலம் பகுதியில் ராஜலிங்கம் (35) என்பவர் தனது டூ வீலர் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, திடீரென நெஞ்சுவலியின் காரணமாக மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர் பரிசோதனை செய்த பிறகு அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News October 15, 2025
BREAKING: கரூர் தவெக செயலாளருக்கு ஜாமீன்

கரூர் தவெக பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் விசாரணை நடைபெறும் நிலையில், கரூர் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மேற்கு மாவட்ட செயலாளருக்கு ஜாமீன் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் ஆகிய இருவருக்கும் கரூர் குற்றவியல் நீதிமன்றம் இன்று (அக்டோபர்.15) காவல் நீட்டிப்பு இல்லாமல் ஜாமின் வழங்க உத்தரவிட்டது.
News October 15, 2025
கரூர்: மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் பயிற்சி

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் (TNMVMD) 79 தொழிற்பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத உதவித்தொகையுடன் 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதம் 8,000 முதல் 9,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <
News October 15, 2025
கரூர்: பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி கூலி தொழிலாளி பலி

க.பரமத்தி அருகே மேலப்பாளையம் பகுதியில் சேகர் என்பவர் மது அருந்திவிட்டு அவரது மனைவியுடன் வாய் தகராறு ஏற்பட்டதில் நேற்று மனவிரக்தியில் இருந்த சேகர், பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து க.பரமத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.