News January 30, 2026
கரூர் சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணி தீவிரம்

கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உத்தரவின்படி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இன்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் குற்றச் செயல்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் இருந்தால், உடனடியாகச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கோ அல்லது அவசர உதவி எண்களுக்கோ அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Similar News
News February 11, 2026
கரூர் மணல் திருடர்களை சிறைபிடித்த EX அமைச்சர்!

கரூர் வாங்கல் அருகே காவிரியாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 3 பொக்லைன் மற்றும் ஒரு லாரியை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சிறைபிடித்தார். பின்னர் பேசிய அவர், “அரசு அனுமதியின்றி தினமும் 300 லாரிகளில் ₹3 கோடிக்கு மணல் கடத்தப்படுகிறது; இதில் திமுகவினருக்குத் தொடர்புள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர், எஸ்.பி., ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
News February 11, 2026
கரூரில் தட்டிதூக்கிய செந்தில் பாலாஜி!

கரூர் மாவட்டம் அதிமுக கட்சியின் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் M.D.A துரைமுருகன் அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது மாவட்ட அமைப்பாளர் பூவை ரமேஷ் மற்றும் ராமலிங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .
News February 10, 2026
கரூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

கரூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க


