News October 4, 2025
கரூர் : சிறப்பு புலனாய்வு குழு விவரம் வெளியீடு!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவில் எஸ்.பி.,க்கள் விமலா, சியாமளா, தேவி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தவும், சம்பவம் தொடர்பாக இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
Similar News
News November 15, 2025
சிலம்பம் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம்!

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் திமுக சார்பில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட சிலம்பப் போட்டியில் குளித்தலை நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சத்திய பிரியா மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து பரிசுத்தொகை ரூபாய் 25000/- பெற்றுள்ளார். அதேபோல 17 வயதுக்குட்பட்ட பிரிவில் ஜமுனா என்பவர் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து ரூ.15000/- ஆயிரம் பரிசுத்தொகை பெற்றுள்ளார்.
News November 15, 2025
கரூர்: மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது!

குளித்தலை அடுத்த நெய்தலூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன்(35). இவர் வெண்ணைமலை பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கார்த்திகேயன் தான் பணிபுரியும் பள்ளியில் படித்து வரும் 14 வயது சிறுமிக்கு கடந்த 4 மாதமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி புகார் அளிக்கையில் கரூர் அனைத்து மகளிர் நிலைய போலீசார் கார்த்திகேயனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
News November 15, 2025
கரூரில் தெரிய வேண்டிய முக்கிய இணையதளங்கள்!

1)கரூர் மாவட்ட இணையதளம்: https://karur.nic.in/ இதில் மாவட்டம் சார்ந்த அறிவிப்புகள், முக்கிய எண்கள் போன்றவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
2)கரூர் மாநகராட்சி: https://www.tnurbantree.tn.gov.in/karur/ இதில் மாநகராட்சி சார்ந்த புகார்கள், ஆவணங்கள் போன்ற சேவைகளைப் பெறலாம்.
3)மாவட்ட நீதிமன்றம்: //karur.dcourts.gov.in/ இதில் நீதிமன்றம் சார்ந்த சேவைகள், வழக்கு குறித்த ஆவணங்களைப் பெறலாம்.


