News October 22, 2025

கரூர்: சாலை விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலி!

image

கரூர்: புலியூர் உப்பிடமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(48). இவர் அரசு பேருந்து நடத்துனராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று(அக்.21) தனது பைக்கில் தாந்தோணிமலை மில்கேட் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் மோதி பலத்த காயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News October 22, 2025

கரூர் எஸ்.பி தலைமையில் பாதுகாப்பு தீவிரம்

image

வடகிழக்கு பருவமழையால் கரூர் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் சந்தர்ப்பத்தில், பொதுமக்களை பாதுகாக்க ஆயுதப்படை மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. இந்த குழுவின் தயார்நிலையை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா இன்று (22.10.2025) ஆயுதப்படை முகாமில் நேரில் பார்வையிட்டு, மீட்பு உபகரணங்களை பரிசோதித்து, தேவையான வழிமுறைகளை வழங்கினார்.

News October 22, 2025

கரூரில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Supervisor பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000-ரூ.50,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News October 22, 2025

கரூர்: பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலை!

image

கரூர்: BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து வரும் அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.(SHARE IT)

error: Content is protected !!