News November 8, 2025

கரூர் சம்பவம்: 8 பேருக்கு முன்ஜாமீன்

image

கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சார நிகழ்ச்சியின் போது, நெரிசலில் சிக்கியவர்களை அழைத்து சென்ற அவசர ஊர்தி ஓட்டுநர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவசர ஊர்தி ஓட்டுநர்கள், 8 பேர் மீது புகார் அளித்து இருந்தனர். இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஸ்ரீமதி, விசாரணைக்கு முழுமையான ஒத்துழைக்க வேண்டும் என 8 பேருக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கினார்.

Similar News

News November 8, 2025

தோகைமலை அருகே அலப்பறை.. தட்டி தூக்கிய போலீஸ்

image

தோகைமலை அருகே ராமச்சந்திரன், பூவரசன் ஆகிய இருவரும் பொது மக்களுக்கு இடையூறாக மது அருந்திக்கொண்டு அலப்பறை செய்து உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் தோகைமலை போலீசார் நேரில் சென்று இருவர்களையும் மடக்கி பிடித்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

News November 8, 2025

கரூர்: வங்கியில் வேலை! விண்ணப்பிக்கவும்

image

கரூர் மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதி சேவை நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer – CSO) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க nabfins.org/Careers/ என்ற முகவரியில் அணுகலாம். கடைசி தேதி 15.11.2025 ஆகும். (SHARE)

News November 8, 2025

கரூர்: B.E, B.Tech போதும் வேலை ரெடி

image

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000-2,20,000
3. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
4. வயது வரம்பு: 45 வயது வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://www.nsic.co.in/Careers/Index என்ற இணையத்தில் பார்க்கவும்.
7.(SHARE பண்ணுங்க)

error: Content is protected !!