News January 22, 2026

கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது: SC

image

கரூரில் 41 பேர் பலியான சம்பவம் துரதிர்ஷ்டவசமானது எனவும், இதில் தலையிட்டு எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்றும் SC தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என தொடரப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக SC உத்தரவின்பேரில் CBI விசாரணை நடத்தி வருவது கவனிக்கத்தக்கது.

Similar News

News March 30, 2026

காதலியை பல துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த காதலன்

image

விசாகப்பட்டினத்தில் நெஞ்சை பதறவைக்கும் கொடூரம் அரங்கேறியுள்ளது. ரவீந்தர்(35) என்பவர் காதலி மோனிகாவை(29) துண்டு துண்டாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்துள்ளார். ரவீந்தருக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில், மனைவி ஊருக்கு சென்ற போது, காதலியை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். திடீரென ஏற்பட்ட சண்டையால், கோபத்தில் இப்படி செய்ததாக அவர் போலீசில் தெரிவித்துள்ளார். காணாமல் போன பெண்ணின் தலையை போலீசார் தேடி வருகின்றனர்.

News March 30, 2026

தேர்தல் குறித்து வித்தியாசமாக விளக்கிய வைகோ

image

நடைபெற்றுவரும் தேர்தல், அரசி​யல் குரு ஷேத்​திரப் போர் இல்லை என வைகோ பேசியுள்ளார். குரு ஷேத்​திரப் போர் என்பது சம பலம் கொண்ட பாண்​ட​வர்​களும், கவுர​வர்​களும் போரிட்​டனர் என்ற அவர், ஆனால் இங்கே அது​போல சம பலம் கொண்ட போட்டியாளர்கள் இல்லை என்றார். மேலும், திமுக கூட்​ட​ணி​தான் பலமாக இருக்​கிறது எனவும், இக்கூட்டணி 200 தொகு​தி​களில் வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News March 30, 2026

அக்கா விசில், தங்கை பானை சின்னத்தில் போட்டி

image

மறைந்த பாமக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தலித் எழில்மலையின் மகள்கள் வரும் தேர்தலில் வெவ்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடுகின்றனர். விசிக சார்பில் அரக்கோணம் தொகுதியில் தலித் எழில்மலையின் மகள் எழில் கரோலின் போட்டியிடும் நிலையில், இவரது சகோதரி கேத்ரினா மதுராந்தகம் தொகுதியின் தவெக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!