News September 18, 2024
கரூர் கலெக்டர் முக்கிய தகவல்

கரூர் மாவட்டத்தில், 8 ஊராட்சி ஒன்றியங்களில் வரும் செப்.22ல் 8,171 மரகன்றுகள் நடவு செய்யப்படவுள்ளது என்று கலெக்டர் தங்கவேல் தகவல் தெரிவித்துள்ளார். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கீழ் தோட்டக்கலைத் துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இதர சமூக அமைப்புகளை கொண்டு 4,100 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது என்று கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 22, 2025
கரூர்: விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை

கரூர்: குளித்தலை சப்-கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக அரசு அலுவலர்கள், ஹிந்து அமைப்பினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ தலைமை வகித்தார். குளித்தலை டி.எஸ்.பி செந்தில்குமார், குளித்தலை கிருஷ்ணராயபுரம் தாசில்தார்கள் நீதிராஜன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
News August 22, 2025
கரூர்: செல்போன் தொலஞ்சிருச்சா? இத பண்ணுங்க!

உங்கள் Phone காணாமல் போனாலோ, திருடு போனாலோ பதற்றம் வேண்டாம்.<
News August 22, 2025
கரூர் மாவட்டத்தில் இன்று மின்தடை

கரூர்: மின் அலுவலகத்திற்கு உட்பட்ட சஞ்சய் நகர் மின்பாதையில் இன்று(ஆக.22) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அருள் நகர், சுந்தர் நகர், ஆத்தூர் பிரிவு, செல்லராபாளையம், திருமால் நகர் ,மருத்துவ நகர் ,அமிர்தாம்பாள் நகர், சஞ்சய் நகர், சாந்தி நகர் ,அர்ச்சனா நகர், அம்மன் சிட்டி, பழனியப்பா நகர், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.