News October 31, 2025
கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

கரூர் வெண்ணைமலையில் உள்ள, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி வகுப்புகள் வரும் நவ. 4 முதல் இணைய வழியில் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற் றுனர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்படவுள்ளது. மேலும் பயிற்சியில் 04324223555 மற்றும் 6383050010 என்ற எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ள வேண்டும் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
Similar News
News October 31, 2025
கரூர்: இன்றே கடைசி நாள்!

கரூர் மக்களே, தமிழ்நாடு மின் விநியோகக் கழகத்தில் நிறுவன செயலாளர் (ACS/FCS) மற்றும் இடைநிலை நிறுவன செயலாளர் ஆகிய பதவிகள் நிரப்படவுள்ளது. மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.1,00,000 வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
News October 31, 2025
கரூர்: குடும்ப தகராறால் விபரீத முடிவு

கரூர் மாவட்டம் K. பரமத்தி அருகே, குவாரியில் மெக்கானிக்காக பணியாற்றும் மணிகண்டன் என்பவர், நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி செலவு செய்துள்ளார். இந்த விஷயம் அறிந்து மனைவி திட்டியதால் மனமுடைந்த அவர், நேற்று வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
News October 31, 2025
கிருஷ்ணராயபுரம் அருகே பாசன வாய்க்காலில் சடலம்!

கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டு மகாதானபுரம் பாசன வாய்க்காலில் கூலித்தொழிலாளர் பெரியசாமி (69) உடல் 5 நாட்கள் கழித்து மீட்கப்பட்டது. அவர் கடந்த 26-ம் தேதி வேலைக்கு சென்று வீடு திரும்பவில்லை. லாலாபேட்டை போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தேடினர். நேற்று மாலை பாசன வாய்க்காலில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.


