News October 15, 2025
கரூர் கலெக்டர் எச்சரிக்கை

வேதி உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளை பயன்படுத்தும் போது மண்ணின் வளம் பாதிக்கப்படுவதுடன், விவசாய பயிர்களின் வளர்ச்சி பாதித்து, மகசூல் குறைந்து வருகிறது. பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் போது, அதன் அளவை கட்டுக்குள் வைத்து பயன்படுத்துவது மிகவும் அவசியம் மேலும் பூச்சிக்கொல்லி பயன்பாட்டை குறைப்பதற்கான வழிமுறைகளை, விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என என கரூர் கலெக்டர் அறிவுறித்தியுள்ளார்.
Similar News
News October 15, 2025
கரூர்: பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி கூலி தொழிலாளி பலி

க.பரமத்தி அருகே மேலப்பாளையம் பகுதியில் சேகர் என்பவர் மது அருந்திவிட்டு அவரது மனைவியுடன் வாய் தகராறு ஏற்பட்டதில் நேற்று மனவிரக்தியில் இருந்த சேகர், பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து க.பரமத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
News October 15, 2025
BREAKING: கரூர் சம்பவம்: பேரவையில் CM விளக்கம்!

கரூர் துயர சம்பவம் குறித்து இன்று (அக்.15) சட்டமன்றப் பேரவையில் விளக்கமளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “த.வெ.க. பிரசாரத்திற்கு வழக்கத்தை விட அதிக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் ஏற்பாட்டாளர்கள் போதிய குடிநீர், உணவு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. 41 உயிர்களைப் பலி கொண்ட இத்துயர சம்பவம் இனி நடைபெறாமல் தடுக்க கூட்டு முயற்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
News October 15, 2025
கரூர்: டூவீலர் மெக்கானிக் நெஞ்சு வலி காரணமாக பலி

கரூர் அருகே வாழ்வார்மங்கலம் பகுதியில் ராஜலிங்கம் (35) என்பவர் தனது டூ வீலர் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, திடீரென நெஞ்சுவலியின் காரணமாக மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர் பரிசோதனை செய்த பிறகு அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.