News April 14, 2025
கரூர்: கடன் தீர்க்கும் ஈசன்!

கரூர்: பஞ்சப்பட்டியில் உள்ள மதுராந்தகேஸ்வரர் கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தக் கோயிலில் திருநீறு கலந்து கொடுக்கப்படும் மருந்துப் பிரசாதம் எந்த வித நோயையும் தீர்க்கும் தன்மை கொண்டதாம். மேலும், இங்கு தொடர்ந்து 21 நாட்கள் விளக்கேற்றி வழிபட்டால் கடன் பிரச்னை நீங்கும் என்பது நம்பிக்கை. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News April 15, 2025
கரூரில் இலவச கூடைப் பந்து பயிற்சி !

கரூர் மாநகராட்சி மற்றும் கரூர் கூடைப்பந்து கழகம் இணைந்து நடத்தும் கோடைகால இலவச கூடைப்பந்து பயிற்சி முகாம் இன்று(ஏப்.14) முதல் மே.15ஆம் தேதி வரை கரூர் மாவட்ட திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 6 – 18 வயது உட்பட்ட வீரர் , வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 989497960 என்கிற எண்ணை அணுகவும். பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க!
News April 15, 2025
கரூரில் மழை பெய்யப் போகிறதாம் குடை முக்கியம்

கடலோர ஆந்திரபிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் ஒரு இடங்களிலும், கனமான மழையும் லேசான மழையும் மற்றும் கரூர் மாவட்டங்களில் பல பகுதியில் இன்று (ஏப்ரல் 15) இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News April 15, 2025
ஒரு க்ளிக் உங்க பணம் காலி சைபர் கிரைம் எச்சரிக்கை!

கரூர் மக்களே, அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.(ஷேர் செய்யுங்கள்)