News October 20, 2025
கரூர்: உப்பிடமங்கலம் பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

கரூர்: உப்பிடமங்கலம் கோட்டம் கரூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்பகவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 24 ஆம் தேதி புதன்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 30, 2026
கரூர்: இனி Whatsapp மூலம் வரி செலுத்தலாம்!

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க.
News January 30, 2026
கரூர்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

கரூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News January 30, 2026
கரூரில் சோகம்: வாலிபர் பலி

கரூர் கொக்காம்பட்டி டெக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் போர்டலி (23), பணியின்போது திடீரென ஏற்பட்ட வலிப்பால் மயங்கி விழுந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நிறுவன மேலாளர் மோகன்ராஜ் அளித்த புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


