News September 10, 2025
கரூர்: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெறும் இடங்கள்!

கரூர் மாநகராட்சியில் இன்று வார்டு எண்.43,45-ற்க்கு தாந்தோணிமலை கே..சி எம் மஹாலிலும், குளித்தலை நகராட்சியில் வார்டு எண்.9, 14, குளித்தலை காவேரி நகர் அண்ணா சமுதாய மண்டபத்திலும், நங்கவரம் பேரூராட்சியில், வார்டு எண்.10, முதல் 18-ற்க்கு நங்கவரம் சமுதாய கூடத்திலும், அரவக்குறிச்சி வட்டாரத்தில், கொடையூர் ஊராட்சிக்கு சீத்தப்பட்டி ஸ்ரீ வாரி மஹாலிலும், ”உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடைபெற உள்ளது
Similar News
News September 10, 2025
கரூர்: +2 முடித்தால் தேர்வின்றி அரசு வேலை!

கரூர் மக்களே அரசு வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவின் துணை நிறுவனமான ’BOP Capital Markets’நிறுவனத்தில் காலியாக உள்ள ’பிஸ்னஸ் டெவலப்மெண்ட் மேனேஜர்’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும்.இதற்கு செப்.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <
News September 10, 2025
’செங்கோட்டையனின் கெடு, கட்சிக்கு கேடு!’- மாஜி அமைச்சர்

கரூர்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது அதிமுக கட்சித் தலைமை எடுத்துள்ள நடவடிக்கையை தான் வரவேற்பதாக முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான கரூர் சின்னசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் இபிஎஸ்-ற்கு இடையூறு செய்வது ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு செய்யும் துரோகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News September 10, 2025
கரூர்: வீடு புகுந்து நகைக் கொள்ளை!

கரூர்: புகழூர் நகராட்சியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர்(58). இவர் பணிக்குச் சென்றுவிட்டு மீண்டும் வந்து வீட்டைத் திறந்து பார்க்கும் போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தற்போது அப்பகுதி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.