News September 19, 2025
கரூர்: இன்று ஸ்கூட்டர் வழங்க நேர்முகத் தேர்வு!

கரூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (19ம் தேதி) இன்று மாற்றுத்திறனாளி மூன்று சக்கர ஸ்கூட்டருக்கு நேர்முகத் தேர்வு தேவையான ஆவணம் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, யூடிஐடி கார்டு, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, இரண்டு புகைப்படம் நேர்முகத் தேர்வு எடுத்துச் செல்லவும். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் என மாற்றுத்திறனாளித்துறை நல அலுவலர் அறிவித்துள்ளார்.
Similar News
News March 3, 2026
கரூரில் பரிசு வழங்கிய செந்தில் பாலாஜி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் வடக்கு மாநகரப் பகுதியில் எம்எல்ஏ செந்தில் பாலாஜி 73 கிலோ மெகா கேக் வெட்டிக் கொண்டாடினார். தொடர்ந்து, வார்டுகளுக்கிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அவர் பரிசுகளை வழங்கிக் கௌரவித்தார். இந்நிகழ்வில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்
News March 3, 2026
கரூரில் தீயில் கருகிய நிலையில் பெண் சடலம் மீட்பு!

வேலாயுதம்பாளையம் செம்பாடாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜாஸ்லி அன்பரசி (47), வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் தீக்காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலைக் கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கணவர் இறந்த துக்கத்தில் தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை.
News March 3, 2026
கரூரில் 175 பேர் ஆப்சென்ட் – கலெக்டர் ஆய்வு!

கரூர் மாவட்டத்தில் 47 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. புனித தெரசா பள்ளியில் கலெக்டர் ரவிகுமார் ஆய்வு செய்தார். மொத்தம் 10,351 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 10,174 பேர் தேர்வு எழுதினர். 99 மாணவர்கள், 59 மாணவியர் மற்றும் 17 தனித்தேர்வர்கள் என மொத்தம் 175 பேர் தேர்வெழுத வரவில்லை. தேர்வுப் பணியில் 630 ஆசிரியர்கள், 110 பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர். .


