News November 2, 2025
கரூர் அருகே வெடித்த நில பிரச்சனை!

கரூர்: கடவூர், ஒந்தாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாமுனி (60). இவரிடம் நிலப் பிரச்சனை காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த சக்தி மற்றும் பொன்னன் ஆகியோர் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. மகாமுனி, இது குறித்து சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த காவல்துறையினர்,சக்தி மற்றும் பொன்னன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News November 6, 2025
கரூர்: சிறைக்காவலர் பதவிக்கான எழுத்துத்தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு காவலர் மற்றும் சிறைக்காவலர் பதவிக்கான எழுத்துத்தேர்வு வருகின்ற 09.11.2025 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணிவரை 1) கரூர் கொங்கு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆகிய பள்ளிகளில் நடைபெறுகிறது. இதற்கான சிறப்பு பேருந்தும் உள்ளது.
News November 6, 2025
கரூரில் வாகன விபத்து; 5 வயது சிறுவன் படுகாயம்

கரூர், சின்ன ஆண்டான் கோவில் சாலையில், ஹரி கிருஷ்ணன் தனது மகன் சபரீஷ் (5) உடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, லிவிக்கா என்ற பெண் தனது இருசக்கர வாகனத்தை ஹரி கிருஷ்ணன் மீது மோதியுளார். இதில் சிறுவன் சபரீஷ் காயமடைந்து கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இச்சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் வழக்கை பதிவு செய்தனர் மற்றும் விசாரணை நடந்து வருகிறது.
News November 6, 2025
கரூர்: டிப்ளமோ போதும்! ரயில்வேயில் வேலை…

ரைட்ஸ் எனப்படும் ரயில்வே நிறுவனத்தில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள 600 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனைத்து பதவிகளுக்கும் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இதற்கு 18- 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.16,338 -ரூ 29,735 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.12க்குள் <


