News January 11, 2026
கரூர் அருகே விபத்தில் ஒருவர் பலி!

கரூர் மாவட்டம் புகலூர், தோட்டக்குறிச்சி, முத்துராஜபுரத்தை சேர்ந்தவர் பழனியப்பன் 77. இவர் நேற்று தோட்டக்குறிச்சி சாலையில் தனது சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அதே சாலையில் கேசவன் ஓட்டி வந்த புல்லட், பின்னால் மோதியதில் பழனியப்பன் கீழே விழுந்து, படுகாயமடைந்தார். பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 8, 2026
கரூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். (SHARE பண்ணுங்க)
News February 8, 2026
தென்னிலை: தலைவலியால் நேர்ந்த சோகம்

தென்னிலை பகுதியைச் சேர்ந்தவர் முருகாயி. இவருக்கு நீண்ட நாளாக தலைவலி இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மன விரக்தியில் விஷம் உட்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
News February 7, 2026
கரூர்: இனி Whatsapp மூலம் வரி செலுத்தலாம்!

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க.


