News November 16, 2025
கரூர் அருகே பெண் அதிரடி கைது!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மேல தாலியாம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி சம்பூரணம் 48. இவர் தனக்குச் சொந்தமான டிபன் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் மது விற்ற சம்பூர்ணம் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 16, 2025
கரூர் மக்களே அரிய வாய்ப்பு!

கரூர் மண்மங்கலம் அடுத்து பண்டுதகாரன்புதூரில், கால்நடை பல்கலை கழக பயிற்சி மையத்தில், தமிழக அரசின், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், வரும், 19 முதல், 25ம் தேதி வரை, கட்டணம் இல்லாத நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. இதில் விருப்பம் உள்ளவர்கள், 04324-294335, 73390-57073 எண்களில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ளலாம் என பயிற்சி மைய தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
கரூர்: யுபிஎஸ்சி தேர்வில் வென்ற பார்வை மாற்றுத்திறன் மாணவன்!

கரூர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஹெச்.டி. ஆய்வு மேற்கொண்டு வரும் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கூட்டக்காரன்பட்டி சேர்ந்த பார்வை மாற்றுத் திறனாளர் சி. முனியாண்டி (30), யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று சிறப்பான சாதனை படைத்துள்ளார். அவருக்கு சிறந்த நூலக பயன்பாட்டாளர் விருதை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுதா வழங்கி பாராட்டினர்.
News November 15, 2025
சிலம்பம் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம்!

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் திமுக சார்பில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட சிலம்பப் போட்டியில் குளித்தலை நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சத்திய பிரியா மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து பரிசுத்தொகை ரூபாய் 25000/- பெற்றுள்ளார். அதேபோல 17 வயதுக்குட்பட்ட பிரிவில் ஜமுனா என்பவர் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து ரூ.15000/- ஆயிரம் பரிசுத்தொகை பெற்றுள்ளார்.


