News January 12, 2026
கரூர் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து

கரூர் மாவட்டம் புகலூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (44). இவர் தனது மனைவி சுகன்யா மற்றும் சகோதரி வைதேகி ஆகியோருடன் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது இவர்களது வாகனத்திற்கு எதிராக குணா என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியது. இவ்விபத்தில் சுப்பிரமணி உட்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News February 17, 2026
கரூர்: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க!

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம் NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <
News February 17, 2026
கரூர் MP ஜோதிமணி பற்றி அவதூறு பேச்சு!

கரூரில் 10-02-26 அன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குறித்துப் பெண்ணின் மாண்பைக் குறைக்கும் வகையிலும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாகக் கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக புகாரின் அடிப்படையில், கரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 17, 2026
நங்கவரம் அருகே வசமாக சிக்கிய பெண் உட்பட ஒருவர் கைது!

கரூர் மாவட்டம், நங்கவரம் அருகே பெத்தாயி என்ற பெண்மணியும், நடைபாலம் பகுதியில் சுப்பிரமணி என்பவரும், தனித்தனியாக சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்தனர். இந்த தகவல் அறிந்த நங்கவரம் போலீசார் நேரில் சென்று இருவர்களையும் மடக்கி பிடித்து, மேலும் அவர்களிடமிருந்து விற்பனை போக வைத்திருந்த 52 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


