News April 27, 2025
கரூர்: அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிப்பு!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, அமைச்சர் பதவியை தொடர்வதில் சிக்கல் எழுந்தது. இதனால் அவர் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகுவார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்த மதுவிலக்கு, ஆயத்தீர்வத்துறை, அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 19, 2025
கரூரில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்

மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை நேரில் தீர்க்கும் ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’, கரூர் நாடாளுமன்றத்திற்குட்பட்ட தாந்தோணி சட்டமன்ற தொகுதியில் இன்று (செப்.19), வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் விஜயபுரம் சமுதாயக்கூடத்தில் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
News September 19, 2025
கரூர்: 116 வயது மதிக்கத்தக்க முதியவர் உயிரிழப்பு

கரூர் மாவட்டம் தோகைமலை அருகேயுள்ள ஆதனூரைச் சேர்ந்த பொன்னுசாமி (வயது 116) தன்னுடைய வாழ்க்கையில் ஒருபோதும் மருத்துவமனைக்குச் செல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தவர். அவருக்கு 2 மகன்கள், 5 பெண் குழந்தைகள், 15 பேரக்குழந்தைகள் மற்றும் 18 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர். வயது முதிர்வு காரணமாக அவர் இயற்கை மரணமடைந்த நிலையில், அவரது உடல் பூந்தேரில் எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
News September 18, 2025
கரூர்: காவல்துறை சார்பில் எச்சரிக்கை!

கரூர் மாவட்ட காவல்துறை, போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், “போதைப்பொருட்கள் உங்களைக் கட்டுப்படுத்த விட வேண்டாம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. “Just Say NO to Drugs” போன்ற வாசகங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவல்களை 9498100780 என்ற வாட்ஸ்அப் (அ) 100-க்கு தகவல் தெரிவிக்கலாம்.