News April 7, 2025
கரூர் அங்கன்வாடியில் வேலைவாய்ப்பு!

கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நேரடி நியமனம் நடைபெறுகிறது. ▶️முதன்மை அங்கன்வாடி பணியாளர் – 3 இடங்கள் ▶️குறு அங்கன்வாடி பணியாளர் – 14 இடங்கள்▶️அங்கன்வாடி உதவியாளர் – 44 இடங்கள் நிரப்படவுள்ளது. ஊதியமாக ரூ.7700 முதல் 24200 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் <
Similar News
News April 7, 2025
கரூரில் டாஸ்மாக் இயங்காது !

கரூர்: வருகிற ஏப்.10ஆம் தேதி ‘மகாவீர் ஜெயந்தி’-யை முன்னிட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் உலர் தினமாக அனுசரிக்கப்பட வேண்டும் எனவும், அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News April 7, 2025
கரூர் கோயிலில் செருப்பு காணிக்கை !

கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலையில் அமைந்துள்ள கல்யாண வெங்கடரமணர் கோயில் மிகவும் புகழ்பெற்றது. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயிலுக்கு நீண்ட தல வரலாறும் உண்டு. தென்நாட்டின் திருப்பதி எனப் போற்றப்படும் இந்தக் கோயிலை வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை. மேலும், செருப்புகளை காணிக்கையாகத் தரும் வழக்கமும் இக்கோயிலில் உண்டு.
News April 7, 2025
தேனீ கடித்ததில் பனை மரத்திலிருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு

கரூர் வாங்கல் வஉசி தெருவை சேர்ந்தவர் தென்னரசு (33). இவர் நேற்று சங்க கொட்டாய் முனியப்பன் கோவில் அருகே உள்ள பனைமரத்தில் ஏறி உள்ளார். அங்கு மரத்தில் மேலிருந்த .தேனீ கடித்ததில் அங்கிருந்து கீழே விழுந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் உடல் கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரின் மனைவி பிரியங்கா புகாரின் பேரில் வாங்கல் போலீசார் நேற்று வழக்கு பதிவு.