News November 1, 2025

கரூரில் விஜய் பேசிய இடத்தை 2-வது நாளாக அளக்கும் CBI

image

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக CBI அதிகாரிகளின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி விடுமுறைக்கு பின் நேற்றிலிருந்து மீண்டும் அவர்கள் விசாரணையை தொடங்கினர். கூட்டம் நடைபெற்ற சாலையின் பரப்பு, அமைப்பு ஆகியவற்றை நேற்று நவீன கருவிகளுடன் ஆய்வு செய்தனர். இந்நிலையில், இன்றும் 2-வது நாளாக வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் நடைபெற்ற சாலையை அளவிட்டு ஆய்வு செய்தனர்.

Similar News

News November 1, 2025

₹44,900 சம்பளம்.. மத்திய அரசில் 258 காலியிடங்கள்!

image

உளவுத்துறையில் காலியாக உள்ள 258 Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
✦வயது: 18- 27 ✦கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் தொடர்பான இன்ஜினியரிங் டிகிரி ✦சம்பளம்: ₹44,900 ✦விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 16 ✦முழு தகவலுக்கு <>இங்கே<<>> கிளிக் செய்யவும். வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கு இதை பகிரவும்.

News November 1, 2025

தமிழக மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்கணும்: SPK

image

பிஹார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பொய்யான தகவலை பரப்பிய மோடி, தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என செல்வப்பெருந்தகை (SPK) வலியுறுத்தியுள்ளார். தேர்தல் லாபத்துக்காக தமிழக மக்களை பழித்துக் கூறுவது ஜனநாயகத்துக்கு எதிரானது; தமிழர்கள் உழைப்பும் அறிவும் இணைந்த மக்களாக உலகம் முழுவதும் மரியாதை பெற்றவர்கள்; அப்படி இருக்கையில் தமிழர்கள் மீதான அவதூறு கருத்தை மோடி திரும்ப பெற வேண்டும் என்றார்.

News November 1, 2025

திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்: விஜய்

image

தமிழ்நாடு உருவாக காரணமான எல்லை போராட்ட தியாகிகளையும், ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்ட காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம் என விஜய் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவிடம் இருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம் எனவும் 2026-ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம் என்றும் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 1956 நவ.1-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!