News February 2, 2026
கரூரில் வசமாக சிக்கிய பெண்கள் உட்பட 5 பேர்: அதிரடி கைது

கரூர் மாவட்டம் லாலாபேட்டை, வெங்கமேடு, சின்னதாராபுரம் மற்றும் மாயனூர் காவல் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் நடவடிக்கை எடுத்து நதியா (38), பாலசுப்பிரமணியன் (33), செந்தில்குமார் (40), தண்டபாணி (45), பூமா (48) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 120 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News February 6, 2026
கரூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை உடனே ஷேர் பண்ணுங்க
News February 6, 2026
கரூரில் சோகம்; விஷம் அருந்தி ஒருவர் தற்கொலை!

கரூர்: பாலவிடுதி அருகே கிழக்கு ராசா பட்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி, குடும்ப சண்டை காரணமாக மூன்று ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று மனவிரக்தியில் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி மயக்கமடைந்த அவர், திண்டுக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News February 6, 2026
கரூரில் சோகம்; விஷம் அருந்தி ஒருவர் தற்கொலை!

கரூர்: பாலவிடுதி அருகே கிழக்கு ராசா பட்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி, குடும்ப சண்டை காரணமாக மூன்று ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று மனவிரக்தியில் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி மயக்கமடைந்த அவர், திண்டுக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


